ஒலுவில் பிர­தே­சத்தை, பாது­காப்­ப­தற்­காக 17 மில்­லியன் ரூபாய் முள்ளிநியூஸ்

ஒலுவில் பிர­தே­சத்தை, பாது­காப்­ப­தற்­காக 17 மில்­லியன் ரூபாய்


கட­ல­ரிப்பின் கார­ண­மாக பெரிதும் பாதிப்­புக்­குள்­ளாகி வரும் ஒலுவில் பிர­தே­சத்தைப் பாது­காப்­ப­தற்­காக 17 மில்­லியன் ரூபாய் நிதி­ஒ­துக்­கீட்டில் அவ­ச­ர­மாக அங்கு 220 மீற்றர் தூர­மான கட­லோரப் பிர­தேசம் பாரிய பாறாங்­கற்­களைக் கொண்டும், கடல் மணலைக் கொண்டும் உட­ன­டி­யாக நிரப்­பப்­ப­ட­வுள்­ளது.

இது குறித்த நட­வ­டிக்­கை­யினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்­கொண்­டுள்ளார்.

இதற்­கான தீர்­மானம் நேற்று மாலை அமைச்சர் ஹக்­கீமின் பாரா­ளு­மன்ற அலு­வ­ல­கத்தில் கரை­யோரப் பாது­காப்புத் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பிரபாத் சந்­தி­ர­கீர்த்தி, பொறி­யி­ய­லாளர் டீ.ரீ.ரூப­சிங்ஹ மற்றும் இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பையின் திட்­ட­மிடல் பொறி­யி­ய­லாளர் சுசந்த அபே­வர்­தன ஆகி­யோ­ருடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக், எம்.எச்.எம்.சல்­மான், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரின் இணைப்புச் செய­லாளர் பழீல் ஆகி­யோரும் பங்கு பற்­றினர்.

மண்­ண­ரிப்­பினால் கடல் ஒலுவில் கிரா­மத்­திற்குள் ­பு­கு­வதால் மக்கள் தங்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை மட்­டு­மல்­லாது, தமது வசிப்­பி­டங்­க­ளையும் இழக்கும் அபாயம் நில­வு­வ­தா­கவும், இது சுனாமி அனர்த்­தத்­திற்குப் பின்னர் இப்­பி­ர­தேச மக்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய ஆபத்­தென்றும் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ஹக்கீம், இந்தக் கட­ல­ரிப்பை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றை துறை­முகங்களுக்குப் பொறுப்­பான அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிப்­ப­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் வடமேல் மாகா­ணத்தில் மார­வில கரை­யோரப் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­படும் கட­ல­ரிப்­பி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான பாரிய செயல்­திட்­ட­மொன்று அடுத்த கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­மென்றும் நம்­பிக்கை தெரி­வித்தார்.

உட­ன­டி­யாக இதில் அனு­பவம் வாய்ந்த முன்­னைய ஒப்­பந்­த­க்­கா­ரரைப் பயன்­ப­டுத்தி 200 தொடக்கம் 250 கிலோ நிறை கொண்ட பாரிய பாறாங்­கற்­களைக் கொண்டு ஒலுவில் கட­லோ­ரத்தில் 220 மீற்றர் தூர­மான பிர­தே­சத்தை நிரப்பி கட­ல­ரிப்பை தடுப்­ப­தெ­னவும், அண்­மிய அட்­டா­ளைச்­சேனை போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மேல­திக கடல் மணலை நவீன தொழில்­நுட்­பத்தைக் கையாண்டு ஒலு­விலை நோக்கி உந்­தித்­தள்­ளு­வ­தற்­கான செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தா­கவும் கூறப்­பட்­டது.

இந்த தொழில்­நுட்­பத்­தினால் மீன்­பிடித் தொழில் போன்­ற­வற்­றிற்கும், நில அமைப்­பிற்கும் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் உண்டா என அமைச்சர் ஹக்கீம் கேள்வி எழுப்­பிய போது அவ்­வா­றான அபாயம் காணப்­ப­ட­வில்லை என கரை­யோரப் பாது­காப்புத் திணைக்­கள உய­ர­தி­கா­ரிகள் பதி­ல­ளித்­தனர்.

அதிக எடை­கொண்ட பாரிய பாறாங்­கற்­களை துறை­முக அதி­கா­ர­ச­பை­யி­ட­மி­ருந்தே பெற்றுக் கொள்ள முடி­யு­மென்றும், சிறிய எடை­கொண்ட கருங்­கற்­களை மாவட்­டத்தின் ஏனைய இடங்­களில் காணப்­படும் கல் உடைக்கும் அகழ்வுக் கிடங்­கு­க­ளிலி­ருந்து பணம் செலுத்தி கொள்­வ­னவு செய்­வ­தென­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.


இத­ன­டிப்­ப­டையில் உட­ன­டி­யாக ஓரிரு தினங்­க­ளி­லேயே இதற்­கான வேலைகளை ஒலுவில் பிரதேசத்தில் ஆரம்பிப்பதாகவும், அடுத்த கட்டமாக அமைச்சரவை பத்திரத்;தினாலும், பிரதமரின் கீழுள்ள குழுவினரின் அனுமதியைப் பெற்றும் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகவும், அத்துடன் காணிகளையும், வதிவிடங்களையும் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை இயன்றவரை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW