தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு ஆங்கில மொழியறிவு கட்டாயம் முள்ளிநியூஸ்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு ஆங்கில மொழியறிவு கட்டாயம்


2018 ஆம் ஆண்டிலிருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அனைத்து தரப்பினர்களுக்கும் ஆங்கில மொழியறிவினை கட்டாய தகுதியொன்றாக உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக வெளிநாடு செல்பவர்களுக்காக ஆங்கில பாட நெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வருடத்தின் முதல் 8 மாதங்களினுள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 200 மில்லியன் அமெரிக்க டொலரினை வருவாயாக ஈட்டியுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW