7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது முள்ளிநியூஸ்

7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது


கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் மேலதிக வகுப்புக்களுக்காக சென்ற வேளையிலேயே துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரான பாடசாலை சிற்றூழியர், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஏற்கனவே 05 தடவைகள் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW