ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரமுகர்கள் சந்திரிகாவுடன் மந்திராலோசனை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் விசேட ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர்.
சுதந்திர கட்சி பொது செயலாளர் துமிந்த திஸநாயக்க, மஹிந்த அமரவீர, ரெஜினோல்ட் கூரே போன்றோர் இவ்விதம் சந்தித்து பேசி உள்ளனர்.
அஹுன்கலவுக்கு அருகில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு இடம்பெற்று உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்கள் என்று பேச்சுக்கள் அடிபடுகின்ற நிலையிலேயே இச்சந்திப்பு நடந்து உள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW