உயர் தரப் பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில்!
க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
2220 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. 305 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW