வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் - 10 ஏக்கர் அளவில் சேதம்
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பூவரசன்குளம் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.