கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இன்று அதிகாலை 12.30 மணியளவில் விமான நிலைய வளாகத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
சந்தேகநபரினால் கொண்டுவரப்பட்ட காற்சட்டைகளின் இடுப்பு பட்டியில் மறைத்து மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டுவரப்பட்ட 1கிலோ 4கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை 31 வயதுடைய ஒருவர் என தெரிய வந்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW