லிபியாவில் இருந்து வந்த அகதிகள் படகில் மூச்சு திணறி 22 பேர் பலி

இங்கே Like Page யை க்ளிக் செய்யவும்
காற்று அதிகவேகமாக வீசியதால் அப்படகு நடுக்கடலில் தத்தளித்தது. அதை அறிந்த இத்தாலி கடற்படை மீட்பு குழுவினர் கப்பலில் சென்று அதில் இருந்தவர்களை மீட்டனர்.
அவர்களில் 22 பேர் இறந்து பிணமாக கிடந்தனர். படகில் அளவுக்கு மீறி ஆட்கள் ஏற்றப்பட்டதால் மூச்சு திணறி அவர்கள் இறந்தது தெரிய வந்தது.
மேலும், மத்திய தரைக் கடலில் 33 படகுகளில் அகதிகளாக வந்தவர்களும் மீட்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்து இருந்தனர். அவர்கள் தவிர 4,655 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது.