முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து திருடிய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர் வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவு முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து திருடிய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர் வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பர்த்த அணிந்த முஸ்லிம் பெண்களும் , முச்சக்கர சாரதியையும் நேற்று 10 வியாழக்கிழமை கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது பதில் நீதிவான் சானிகா பெரேரா உத்தரவிட்டார்.
இச் சம்பவம் மேலும் தெரியயவருவதாது. நேற்று முன்தினம் 09 புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் முள்ளிப் பொத்தானைனில்
இப் பெண்கள் குறிப்பாக பெண்கள் நாடாத்தி வந்த கடைசியில் பொருள் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்து ஒருவர் கதைத்து கொண்டு இருக்கும் போது மற்றவர் ஆட்டாவில் பெருட்களை ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்று கொண்பிர்ந்தனர்.
அவர்களை பொது மக்கள் ஒன்று திரண்டு துரத்தி சென்று பிடிக்க முடியாமையால் வீதி போக்குவரத்து பொலிஸின் உதவியை நாடி முவரையும் ஆட்டாவையும் அதன் சாரதியையும் தம்பலகாமப் பொலிசார்
கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப் பெண்கள் உட்பட முச்சக்சக்கர வண்டி சாரதி மொரவெவ பொலிஸ் பிரிவில் ரொட்ட வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.