மக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கான செயற்பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி

மக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கான செயற்பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். கீரிமலையில் நேற்று இடம்பெற்ற வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி, காங்கேசன்துறை மற்றும் தையிட்டி பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த 454 ஏக்கர் காணிகளையும் மக்களுக்காக மீளக் கையளித்த பின்னர் இந்த விடயத்தைக் கூறினார்.