கந்தளாய் திவுள்ஹக என்னும்மிடத்தில் யானைதாக்கி ஒருவர் மரணம் முள்ளிநியூஸ்

கந்தளாய் திவுள்ஹக என்னும்மிடத்தில் யானைதாக்கி ஒருவர் மரணம்


திருகோணமலை கந்தளாய் பகுதியில் திவுலு ஹக பகுதியில் யானை தாக்கி முதியார் ஒருவர் உயிழந்த சம்பவம் ஒன்று இன்று 19 சனிக்கிழமை இடம்பெற்றாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த ஜமால்தீன் வயது 72 என்பவராவர். இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து திவுலு ஹக பகுதிக்கு மாட்டுப் பட்டிக்கு பார்வையிடுவதற்காக சென்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரது சடலம் கந்தளாய் வைத்திய சாலையில் பிரேர பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW