நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு (video)
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின் வடகிழக்கு பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.
சுனாமியின் முதலாவது அலை 8 அடி உயரத்துக்கு தாக்கியுள்ள நிலையில் சுனாமியின் தாக்கம் தொடர்ந்து காணப்படும் எனவும் நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் தற்போதைய நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதம் அதிரிக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது.
இதனால் நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. இதன்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின.