'நீங்கள் படித்தவர்தானே' அப்துர் ராசிக்கிடம் கேட்ட நீதிபதியும், 15 சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய SLTJ யும்

தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துர் ராசிக் கடும் நிபந்தனைகளுடன் தற்போது பிணையில் விடுதலை செயய்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதன்போது நீதிமன்றத்தில் நடந்த சில விடயங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பிரத்தியேகமாக கிடைத்தது.
தவ்ஹீத் ஜமாத்தானது ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் மூத்த சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக 15 சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. எப்படியேனும் அப்துர் ராசிக்குக்கு பிணை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கடுமையாக முயற்சித்துள்ளனர்.
அப்துர் ராசிக்கை விடுவிப்பது சமூக அமைதிக்கு பங்கள் விளைவிப்பதாக அமையுமென ஞானசாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
பொலிஸார் சார்பிலும் அப்துர் ராசிக் பிணையில் விடுதலை ஆவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எpனும் அப்துர் ராசிக் சார்பில் ஆஜராகியுள்ள சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி, அப்துர் ராசிக் விடுதலை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை நிதானமாக வலியுறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் அப்துர் ராகிக்கை பார்த்த நீதிபதி, நீங்கள் களனி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளீர்கள். அங்கு ஏனைய இன, சமூக மாணவர்களும் படித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் தனியாகவா போராடினீர்கள்..?
நீங்கள் படித்தவர்தானே எனக்கூறி கடும் நிபந்தனைகளுடன் அப்துர் ராசிக்கை பிணையில் விடுவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதன்போது நீதிமன்றத்தில் நடந்த சில விடயங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பிரத்தியேகமாக கிடைத்தது.
தவ்ஹீத் ஜமாத்தானது ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் மூத்த சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக 15 சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. எப்படியேனும் அப்துர் ராசிக்குக்கு பிணை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கடுமையாக முயற்சித்துள்ளனர்.
அப்துர் ராசிக்கை விடுவிப்பது சமூக அமைதிக்கு பங்கள் விளைவிப்பதாக அமையுமென ஞானசாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
பொலிஸார் சார்பிலும் அப்துர் ராசிக் பிணையில் விடுதலை ஆவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எpனும் அப்துர் ராசிக் சார்பில் ஆஜராகியுள்ள சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி, அப்துர் ராசிக் விடுதலை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை நிதானமாக வலியுறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் அப்துர் ராகிக்கை பார்த்த நீதிபதி, நீங்கள் களனி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளீர்கள். அங்கு ஏனைய இன, சமூக மாணவர்களும் படித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் தனியாகவா போராடினீர்கள்..?
நீங்கள் படித்தவர்தானே எனக்கூறி கடும் நிபந்தனைகளுடன் அப்துர் ராசிக்கை பிணையில் விடுவித்துள்ளார்.