துருக்கி: இஸ்தான்புல் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி!
துருக்கி, இஸ்தான்புல் உதைபந்தாட்ட மைதானம் ஒன்றருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 15 பேர்ய உயிரிழந்துள்ளதோடு 69 பேர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி பொலிசாரைக் குறி வைத்தே வாகனம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்கொலைத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் அரச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் துருக்கியில் பல தடவைகள் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.