துருக்கி தலைநகரில் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் : 29 பேர் பலி .. முள்ளிநியூஸ்

துருக்கி தலைநகரில் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் : 29 பேர் பலி ..


துருக்கி உதைப்பந்தாட்ட மைதானத்திற்கு வெளியே இடன்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 29 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 166 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முதலாவதாக இஸ்தான்புல் நகரில் பெசிக்டாஸ் கால்பந்து மைதானத்துக்கு வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ள அதேவேளை அதனை தொடர்ந்து 45 வினாடிகளில் மெக்கா பூங்கா அருகே மற்றொரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 29 பேர் பலியாகியுள்ள அதேவேளை அவர்களில் 27 பேர் போலீசார் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

குண்டு வெடிப்பில் மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியை காண வந்த பொது மக்கள் 166 பேர் படுகாயம் அடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2-வது வெடிகுண்டு தாக்குதல் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே குண்டு வெடிப்பில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW