யுத்தமில்லை ஆனால் பொலிசாரின் தேவை அதிகரித்துள்ளது: பூஜித
நாட்டில் யுத்தமில்லை ஆனால் பொலிசாரின் தேவை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.
புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவா, இன்று பொலிசார் மிக அதிகளவில் விமர்சிக்கப்படுவதாகவும் அதற்கான அடிப்படை மக்களுக்கு பொலிசாரின் தேவை அதிகரித்துள்ளதே எனவும் தெரிவித்துள்ளதுடன் மக்கள் மனங்களை வெல்வதற்கு பொலிசார் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.