எதிர்காலத்தில் நானும் ஆட்சிபீடம் ஏறலாம்: ராஜித
எதிர்காலத்தில் தானும் ஆட்சிபீடம் ஏறலாம் என்பதால் தான் எப்போதும் மக்கள் பக்கமிருந்தே சிந்திப்பதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தான் சிம்மசொப்பனமாகத் திகழ்வது அவர்களுக்கு பிடிக்கவிவ்லையாயினும் சாதாரண மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே தான் முடிவுகளை எடுப்பதாகவும் யாருக்கும் அடிபணியப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு புகையிலை வரி மற்றும் விலை உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாவிட்டால் குறித்த நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிட்டு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.