கண்டி மாவட்ட மக்கள் இன ரீதியாக முரண்பட்டுக் கொண்டது கிடையாது -சரத் ஏக்கநாயக்க முள்ளிநியூஸ்

கண்டி மாவட்ட மக்கள் இன ரீதியாக முரண்பட்டுக் கொண்டது கிடையாது -சரத் ஏக்கநாயக்க


இன்று இன, மத, குல பேதங்களின்றி ஒரே தாய் நாடு என்ற வகையில் எல்லோரும் ஓன்று சேர்ந்து வாழும் சூழல் எமது நாட்டில் உருவாகியுள்ளது. எமது நாட்டில் முரண்பட்டுகொள்ளப்போவதில்லை. விசேடமாக கண்டி மாவட்ட மக்கள் இன ரீதியாக எப்போதுமே முரண்பட்டுக் கொண்டது கிடையாது. கடந்த வாரம் வருகை தந்த வண பிதா மல்கம் ரஞ்சித் ஆண்டகை வருகை தந்த போது கண்டி நகரம் சமாதானத்துக்குரிய நகரமாக பிரதிபிலிக்கின்றது என்று கூறிச் சென்றார். நாங்கள் ஒன்றுபட்டு இருப்பதன் காரணமாகவே அவர் அவ்வாறு கூறுவதற்கான முக்கிய காரணம். என்ன சவால்கள் வந்தாலும் அதனை எதிர் கொண்டு ஒற்றுமையாக இருக்குமாறு எமது சமயத்த தலைவர்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்கள். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல அனுபவங்களும் நல்ல சமய போதனைகளும் வழிகாட்டியுள்ளன. ஒற்றுமை என்னும் போது எல்லோரும் ஒன்றுபட்டு விடுகின்றோம்.

சமதானம் தொடர்பான கல்வி நடவடிக்கைகளை மத்திய மாகாண சபை முன்னெடுத்து வருகின்றது. புதிய 2017 ஆம் ஆண்டிலும் ஒற்றுமையை வலியுறுத்தக் கூடிய வகையில் பாடசாலை மட்டத்தில் புதிய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவிப்பு

ஆர், எம். இம்டியாஸ் கடந்த 11 வது வருட காலமாக கண்டி மஹிய்யாவப் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பை என்பவற்றை வழங்கி வைபவம் மஹிய்யாப் சந்தியில் 30-12-2016 ஆர், எம். இம்டியாஸ் தலைமையிவ் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க இவ்வாறு அங்கு தெரிவித்தார்.

1500 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பை என்பவை வழங்கி வைக்கப்பட்டன.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

கடந்த வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி மத்திய மாகாணத்திலுள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 2000 மாணவர்களை ஒன்றிணைத்து பெரியளவில் தைப்பொங்கல் விழாவை நாங்கள் கொண்டாடினோம். அதேபோல் சிங்கள, தமிழ் சித்திரைப் புத்தாண்டு , வெசாக் தினம் போன்ற நிகழ்வுகளை நடத்தப்பட்டன. இது நாங்கள் இலங்கைக்கு முன்மாதரியாக நடத்திக் காட்டிய நிகழ்வுகளாகும். பாடசாலை மாணவர்கள் மத்தியில் நெருக்கமான உறவும் தொடர்புகளும் இருக்குமானால் எதிர்காலம் சமூகம் ஒற்றுமைமிக்க சமுதாயமாக மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.

எமது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒரே தாய் நாட்டு மக்கள் என மிகவும் கூர்மையான கருத்தை முன் வைத்து வருகின்றார். இந்தப் புதிய ஆண்டில் சக்திமிக்க இன நல்லிணக்கத்தை வழிகோலும் செயற்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

இன ஒருமைப்பாட்டுக்காக எமது இம்டியாஸ் சிறந்த வழியைக் காட்டியுள்ளார். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டள்ளன. இவ்வாறான நல்ல விடயங்கள் கல்விக்கு உதவி செய்து மட்டுமல்ல இன ஒருமைப்பாட்டை வளர்க்கின்ற நல்ல காரியமாகவும் அமைகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அஷஷெய்க் பசுலுர் ரஹம்மான் ,பௌத்த சமய மத குரு, மற்றும் இந்து சமய மதகுரு உள்ளிட்டவர்களுடன் பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை நிலை நாட்டிய மாணவர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW