122 இற்கு 11 என பெரும்பான்மையை உறுதிப்படுத்தினார் பழனிசாமி

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அணி 122 வாக்குகள் பெற்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணி 11 வாக்குகள் மட்டுமே பெற்றது.
இதனை அடுத்து, முதல்வர் பழனிச்சாமி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, பேரவையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இதன்போது இடம்பெற்ற அமளி துமளியில், சட்டை கிழிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார்.