யானை மோதி கார் சேதம்!
அநுராதபுரத்திலிருந்து குருநாகல் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றில் யானை மோதியதுடன் அதன் மேலேறியதால் சிறிய ரக கார் ஒன்று பலத்த சேதத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் செலுத்தி வந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், குறித்த பெண் நூலிழையில் உயிர் தப்பியதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.