ராஜகிரிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

இங்கே Like செய்யுங்கள்
ராஜகிரிய பகுதயில் இயங்கி வந்த பல்பொருள் அங்காடியொன்றில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 5.30 அளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்து இரண்டு மணி நேர போராட்டத்தின் பின் காலை 7.30 அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோட்டே நகர சபை மற்றும் தெஹிவளை, கொழும்பு, கல்கிஸ்ஸ நகர சபைகளின் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.