உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் நவம்பரில்

ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின்கீழ் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லை நிர்ணய அறிக்கையின்படி 5092 தேர்தல் தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதுடன், மேலும் 30 சதவீதமான பிரதிநிதிகள் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். உள்ளூராட்சி சபைகளில் தற்போது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இருக்கின்றனர். புதிய தேர்தல் முறைப்படி இந்த எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கும்.
இருந்தும் இந்த எண்ணிக்கையை 7000 ஆக குறைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.