‘பௌத்த’ பொது வேட்பாளரைக் களமிறக்குவோம்: பொது பல சேனா!
2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பௌத்த மக்களின் அபிலாசைகளைப் புரிந்து கொண்ட பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கப் போவதாக தெரிவிக்கிறது பொது பல சேனா.
விஜேதாச ராஜபக்ச இனவாத சக்திகள் மற்றும் மஹிந்த குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் அவரையே பொது வேட்பாளராக்கவும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது பல சேனாவும் இதற்கேற்ப ‘பௌத்த’ பொது வேட்பாளர் பற்றி ஆர்வம் வெளியிட்டுள்ளமையும் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன, ஞானசார உட்பட கடும்போக்கு வாதிகள் விஜேதாசவின் உறுதி மொழிகளின் பின்னரே அடங்கியிருந்தமையும் நினைவுகூறத்தக்கது.