முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதி விபத்து - இருவர் பலி முள்ளிநியூஸ்

முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதி விபத்து - இருவர் பலி

இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்றிருந்த 32 வயதுடைய ஒருவரே முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். வெலிகம - பெலேன பசளை களஞ்சிய புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.



 
காயமடைந்தவர்கள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள், அவர்களின் தாய் மற்றும் இருவர் பயணித்துள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்றிருந்த 32 வயதுடைய ஒருவரே முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த ஒன்பது வயது குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரு குழந்தைகள், தாய் மற்றும் மற்றுமொருவர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிகம பெலியான மோதர வத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை முடிந்து மூன்று குழந்தைகளையும் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW