தாமதமான விமானம் - வெளிநாட்டில் வேலையை இழந்த இலங்கை இளைஞர்கள் முள்ளிநியூஸ்

தாமதமான விமானம் - வெளிநாட்டில் வேலையை இழந்த இலங்கை இளைஞர்கள்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொரியாவுக்கு புறப்பட வேண்டிய இலங்கை விமானம் பத்து மணி நேரம் தாமதமானதால் இலங்கையைச் சேர்ந்த 48 இளைஞர்கள் கொரிய வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

48 இளைஞர்களும் நேற்றிரவு கொரியாவுக்குச் செல்லவிருந்த நிலையில், இரவு 8:00 மணிக்கு அவர்கள் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட முடியவில்லை. 10 மணி நேரத்துக்குப் பிறகு இன்று காலை 6 மணிக்கு விமானம் கொரியாவுக்கு புறப்பட்டது. 

அந்த நிலைமையின் அடிப்படையில், கொரியாவில் இளைஞர்கள் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கொரியாவின் வெளிநாட்டு சேவை பணியகம் தெரிவித்துள்ளது. 10 மணி நேர தாமதம் காரணமாக அந்த இளைஞர்களை ஏற்க மறுப்பதாக கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக கொரியாவுக்கு வந்த 48 இளைஞர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW