வடகொரியாவில் இரண்டு வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வட கொரியாவில் இரண்டு வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கை 2022 மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மத நம்பிக்கைகள் கொண்ட மக்கள் மீது ஆட்சியின் அடக்குமுறையை ஆவணப்படுத்துகிறது.
வட கொரியா அதிகாரப்பூர்வமாக மதத்தை கடைப்பிடிக்க சுதந்திரம் அளித்த போதிலும் தன்னை நாத்திக நாடாக கருதுகிறது. இருப்பினும், கிம் ஜான்-உன் ஆட்சி நாட்டின் மத நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகிறது.
குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், குழந்தை கூட காப்பாற்றப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
200,000 முதல் 400,000 வரை ஐ.நாவால் மதிப்பிடப்பட்ட கிறிஸ்தவர்கள் கிம் ஜாங்-உன் கீழ் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்த பல்வேறு அரச சாரா நிறுவனங்கள், மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 70 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிறித்தவ நம்பிக்கைகளைக் கொண்டதற்காக வட கொரியர்கள் கொல்லப்பட்ட பல நிகழ்வுகளையும் அமெரிக்க அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு சம்பவத்தில், 2011 இல் ஒரு பெண்ணும் அவரது பேரக்குழந்தையும் துப்பாக்கிச் சூடு மூலம் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
"புறா சித்திரவதையை" எதிர்கொண்டதாகக் கூறப்படும் சில விசுவாசிகளையும் அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
மற்ற நிகழ்வுகளில், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தூக்கத்தை இழந்தனர், ஒரு பெண் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக் காவலர்கள் அந்த பெண்ணை தூங்க அனுமதிக்க மறுத்ததால் 2020 இல் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் மிகக் கடுமையான தண்டனைகளைப் பெறுகிறார்கள் மற்றவர்கள் பட்டினி, நீரிழப்பு, கறைபடிந்த உணவு, அடித்தல், மற்றும் நீண்ட காலத்திற்கு வேதனையான நிலைகளை ஏற்கச் செய்யப்பட்டனர்.
பல வட கொரிய கிறிஸ்தவர்கள் தண்டனைக்கு பயந்து தங்கள் குழந்தைகளிடமிருந்து தங்கள் நம்பிக்கையை மறைத்துவிட்டனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
