கொழும்பு பிரதான வீதியில் 3 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று விபத்து 20 பேரின் நிலை!
இன்று (26) காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து
புஸ்ஸல்ல ஆசிரியப் பயிற்சி நிலையத்துக்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து முன்னோக்கி நகர்ந்தமையினால் பாதை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


