கடனை வழங்காத இலங்கை இருளில் மூழ்கும் பங்களாதேஷ்
பங்களாதேஷில் பல மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் கடுமையான அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி மற்றும் எரிபொருள் இறக்குமதி நிறுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வார தொடக்கத்தில் இருந்து நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டதால் மின்வெட்டு ஏற்பட்டது.
இலங்கையும் பங்களாதேஷுக்கு 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இலங்கை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
