திருகோணமலை கடற்பகுதிகள் கொந்தளிப்பு

திருகோணமலை கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
அக் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு, 65 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.