இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை முள்ளிநியூஸ்

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

ஹம்பாந்தோட்டை - புதிய பொல்பிட்டிக்கு இடையிலான உயர் மின்னழுத்த மின் விநியோக மார்க்கம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளது.

 குறித்த பகுதிகளில் பட்டம் பறக்க விடப்படுவதால் மின்கம்பிகளில் பட்டங்கள் சிக்குண்டு விபத்துக்கள் ஏற்படுவதனால் பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது. 

 குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாரத்தில் மின்கம்பிகளை இணைக்கும் நடவடிக்கைகள் முடிவடையும் எனவும், எனவே பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW