அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசா கேட்டு, நடைபயணம் செய்த இலங்கையருக்கு மகிழ்ச்சி முள்ளிநியூஸ்

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசா கேட்டு, நடைபயணம் செய்த இலங்கையருக்கு மகிழ்ச்சி

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசா கேட்டு, நடைபயணம் செய்த இலங்கையருக்கு மகிழ்ச்சி

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார் நெய்ல் பரா அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன் பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார். 

 இந்நிலையில் நெய்ல் பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது - சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில், நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளதுடன் , நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 கடந்த 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்த நிலையில் தற்போதுதான் இனிப்பான செய்தியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW