இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு புதிய தீர்மானம்

இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக, சில பொருட்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. சில பொருட்கள் தடை செய்யப்பட்டன.
இதனால் குறிப்பாக சுங்கத் திணைக்களத்திற்கு அழுத்தம் ஏற்பட்டதுடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
தற்போதைக்கு, HS குறியீடு 304 தொடர்பான கட்டுப்பாடுகளைத் தவிர, ஏனைய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவோம் என்று நம்புகிறோம்.
அங்கு, HS குறியீடு 304 தவிர மற்ற வாகனங்கள் தனிப்பட்ட நுகர்வுக்காக விலக்கு அளிக்கப்படும்.
ஏனைய பொருட்களுக்கு 299 ஹெச்எஸ் குறியீடுகள் உள்ளன, குறிப்பாக வணிக வாகனங்களுக்கு 67 ஹெச்எஸ் குறியீடுகள் உள்ளன.
ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட நடைமுறையை மாற்ற நாங்கள் அரசாங்கமாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW