பாடசாலை மாணவர்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு ! முள்ளிநியூஸ்

பாடசாலை மாணவர்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு !

பாடசாலை மாணவர்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு !

8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் நேற்று (17) நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW