பாகிஸ்தானில் இன்று குண்டுவெடிப்பு 42 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றகுண்டுவெடிப்பில் 42 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. குறித்த குண்டு வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள்தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான பாகிஸ்தானின் பிரபல வழக்கறிஞர்ஒருவரின் சடலமானது குறித்த வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயேகுறித்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதற்கமைய இந்த வைத்தியசாலைக்கு முன்பாக சட்டத்தரணிகள் மற்றும் பெருமளவானஊடகவியலாளர்கள் குழுமியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த குண்டுவெடிப்பினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் பலியாகியிருக்கலாம்என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றுதகவல்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான பாகிஸ்தானின் பிரபல வழக்கறிஞர்ஒருவரின் சடலமானது குறித்த வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயேகுறித்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதற்கமைய இந்த வைத்தியசாலைக்கு முன்பாக சட்டத்தரணிகள் மற்றும் பெருமளவானஊடகவியலாளர்கள் குழுமியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த குண்டுவெடிப்பினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் பலியாகியிருக்கலாம்என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றுதகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW