தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, தவ்ஹீத் என இனிமேல் டிரஸ்டி போர்டில் இருந்து கொண்டு ஆட்டம் போட முடியாது..!! சட்டத்தை கொண்டு அடக்குவோம் என்கிறார் வக்பு சபைத் தலைவர்

வக்பு சபை தலைவர் யாஸீன் தெரிவிப்பு
பெரும்பாலான பள்ளிவாசல் நிர்வாகிகள் பள்ளிவாசல் மூலம் தங்களது தனிப்பட்ட கருத்துக்களையே பரப்பிவருகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகளின் கடமை வக்பு சொத்துக்களைக் காப்பாற்றி மக்களுக்குச் சேவை செய்வதாகும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரிவித்தார்.
முஸ்லிம் கிராமங்களில் கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்த தெரிவிக்கையில் பள்ளிவாசல்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவது தனிப்பட்ட கொள்கைகளைப் பரப்புவதற்காகவல்ல.
நிர்வாகம் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஒரே கிராமத்தில் அல்லது பிரதேசத்தில் கொள்கை ரீதியாக வேறுபட்ட பல பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் இயங்குவதால் பிரச்சினைகள் உருவாகுகின்றன. பள்ளிவாசல் நிர்வாகிகள் தனிப்பட்ட கொள்கைகளுக்கு இடமளிக்காது செயற்பட்டால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்காது.
பள்ளிவாசல் நிர்வாகத்துக்குள் ஜனநாயகம் பேணப்பட வேண்டும். நிர்வாக சபையில் 30 வீதம் படித்த இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும். புத்திஜீவிகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் கொள்கை ரீதியாக பிளவுபட்டு ஆதிக்கம் செலுத்த முயன்றால் அது நாட்டிலுள்ள சட்டத்தின் மூலம் தடுக்கமுயற்சிக்கப்படும்.
இதனால் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.ஒரு பிரதேசத்தில் பல பள்ளிவாசல்கள் இயங்கிவரும் நிலையில் அப்பள்ளிவாசல்களுக்கிடையில் கொள்கை ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டால் அப்பிரதேசத்திலுள்ள பெரிய பள்ளிவாசல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியேற்படும் என்றார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW