சிறு­மி­க­ள் யு­வ­தி­க­ளுக்­கு பாது­காப்­பற்ற நாடா இது? முள்ளிநியூஸ்

சிறு­மி­க­ள் யு­வ­தி­க­ளுக்­கு பாது­காப்­பற்ற நாடா இது?






(vidivelli)
நாட்­டில் பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ண­மே­யுள்­ளன.



அவற்றைக் கட்­டுப்­ப­டுத்தத் தேவை­யான சட்­ட­ ந­ட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற போதிலும் தினமும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பதிவாகிக் கொண்டே வரு­கின்­ற­ன.

இரு வாரங்களுக்கு முன்னர் மாத்தறை பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் 30 க்கும் மேற்பட்ட நபர்களால் தொடராக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.

இதனுடன் தொடர்புடைய 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்றுதான் கண்டி மாவட்டத்தில் ஹந்தானையில் அமைந்துள்ள தனியார் இளைஞர் பயிற்சி நிலையமொன்றில் கல்வி பயின்ற ஒரு தொகுதி யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்றுவரை இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்­விரு சம்­­ப­வங்­களும் ஏக காலத்தில் நடை­பெற்­றி­ருக்­கின்ற அதே­நேரம் ஊட­கங்­களின் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ள­ன. எனினும் இவற்றைப் போல் ஏரா­ள­மான சம்­ப­வங்கள் தினமும் நாட்டில் நடந்த வண்ணமே உள்­ளன என்­பதே யதார்த்­த­மா­கும்.
இலங்கையில் நாளொன்றுக்கு சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக 10 குற்றச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்­தது.

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் கல்வியூட்டல் தொடர்பான பொலிஸ் பிரிவின் அலுவலர் குமார மனோஜ் சமரசேகரவே இவ்­வாறு குறி­ப்­பிட்­டி­ருந்­தார்.

அதே­போன்­றுதான் வீட்டு வன்முறைகளை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு 60 வீதமாக இருந்த பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் 2013 ஆம் ஆண்டு 80 வீதமாக அதிக­ரித்­துள்­ள­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் குறிப்­பி­டு­கி­ன்­­றன.

உலகில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் நடைபெறும் நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.

நாட்டில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு வகையில் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்.

பொதுப் போக்குவரத்து சாதனங்களில் செல்லும் பெண்களில் 95 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர் என இத் தர­வுகள் குறிப்­பி­டு­கின்­ற­ன.

பெண்­க­ளுக்கு எதி­ரா­கவும் சிறு­வர் சிறு­மி­க­ளுக்கு எதி­ரா­கவும் தொடரும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக நாம் அனை­வரும் இன மத பேதங்­க­ளுக்கு அப்பால் ஒன்­று­பட்­டுக் குர­லெ­ழுப்ப முன்­வர வேண்டும்.

அதே­வேளை இவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடும் தண்­ட­­னைகள் வழங்­கப்­ப­டவும் வேண்­டும்.                                             
     இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW