இந்தோனேசியாவில் இளம் ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை.

இந்தோனேசியாவில் திருமணம் செய்யாது காதல் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 3 இளம் ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பால் அடித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பண்டா ஏக் நகரிலுள்ள அல் – புர்கன் பள்ளிவாசலில் இந்தப் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி தண்டனை நிறைவேற்றத்துக்குள்ளான பெண்ணொருவர் பிரம்படி தண்டனை பெற்று அழுவதையும் ஆணொருவருக்கு அதே விதத்தில் தண்டனை நிறைவேற்றப்படுவதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அங்கு கணவன் – மனைவி பந்தத்துக்கு அப்பால் ஆண்களும் பெண்களும் எதிர்ப்பாலாருடன் நெருக்கமாகப் பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW