கண்டியில்:-மதுபோதையில் வந்த சிங்கள வாலிபர்கள், முஸ்லிம்களுடன் மோதல் - 4 பேர் காயம், 5 பேர் கைது முள்ளிநியூஸ்

கண்டியில்:-மதுபோதையில் வந்த சிங்கள வாலிபர்கள், முஸ்லிம்களுடன் மோதல் - 4 பேர் காயம், 5 பேர் கைது



கண்டி – அங்கும்புர – கல்ஹின்னயில் 2 குழுக்கள் இடையே மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று(14) இரவு வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தை சமரசப்படுத்த சென்ற அங்கும்புர பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிங்கள வாலிபர் குழு ஒன்று நேற்று இரவு மதுபோதையில் கல்ஹின்னை வர்த்தக நிலையமொன்றிக்கு சென்று சிகரெட் கேட்டு பிரச்சினைப் படுத்தியுள்ளனர்.

அங்கிருந்த முஸ்லிம்களுக்கு தூசன வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் பெரும்பான்மை குழுவுக்கும்இ முஸ்லிம் வாலிபர்களுக்கும் கைகலப்பாக மாறியது

இதனைதொடந்து ஸ்தலத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் பெரும்பான்மை குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW