இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த கடல் அட்டைகளை இந்திய பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த கடல் அட்டைகளை இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்
இராமேஸ்வரம் பகுதியிலேயே குறித்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் 10 இலட்சம் என இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.