இலங்கையில் வறுமை அதிகரிப்பு: ஆய்வு வெளியானது முள்ளிநியூஸ்

இலங்கையில் வறுமை அதிகரிப்பு: ஆய்வு வெளியானது



இலங்கையின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களத்தின் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியுடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் சராசரி வருவாய் தொடர்பான இந்த ஆய்வு நாடளாவிய ரீதியாக 25 ஆயிரம் குடும்பங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW