இலங்கைக்கு கொண்டு வர முற்பட்ட ஒருதொகை போதை பொருட்கள் இராமேஸ்வரம் பொலிஸாரால் பறிமுதல்

இலங்கைக்கு கொண்டு வர முற்பட்ட ஒருதொகை போதை பொருட்கள் இராமேஸ்வரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இராமநாதபுரத்திலிருந்து 5 பெட்டிகளில் அடைக்கப்பட்ட போதைப் பொருட்கள் வேதளை கடற்பகுதிக்கு கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 இலட்சம் போதை மாத்தரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் ஒருகோடி ரூபா மதிக்கத்தக்க மாத்திரைகளே இலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக செய்தியாளர் குறிப்பிட்டார்.