யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் ,இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி , மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மாவட்டங்களில் தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் மட்டும் முன்னெடுக்கப்படுவதுடன் பாடசாலைகள் , கடைகள் என்பன முற்றாக இயங்கவில்லை என எமது செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.