சீனாவில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

சீனாவில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழப்பு



சீனாவில் இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காணாமற்போயுள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த சுரங்கத்தில் எரிவாயு வெளியேறியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காணாமற்போனதாக கூறப்படும் 20 சுரங்கத் தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையில் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் Shandong மாகாணத்தில் நடைபெற்ற சுரங்க விபத்தில் சிக்கிய 4 சுரங்கத் தொழிலாளர்கள் 36 நாட்களின் பின்னர் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW