அமைச்சரவையில் தவ்ஹீத் ஜமாத் பற்றி பேச்சு - முஸ்லிம் தீவிரவாத குழு என்கிறார் மங்கள சம­ர­வீர முள்ளிநியூஸ்

அமைச்சரவையில் தவ்ஹீத் ஜமாத் பற்றி பேச்சு - முஸ்லிம் தீவிரவாத குழு என்கிறார் மங்கள சம­ர­வீர


முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள சம­கால பிரச்­சி­னைகள் தொடர்பில் நேற்று (08) நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் விஷேட கவனம் செலுத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து முஸ்லிம் அமைச்­சர்­க­ளினால் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டன.

வெளி­நாட்­ட­மைச்சர் மங்­கள சம­ர­வீர நாட்டில் பௌத்த தீவி­ர­வா­தமும், முஸ்லிம் தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

அவர் தனது உரையில்

‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் செயற்­பட்­டு­வந்த பௌத்த தீவி­ர­வாத குழுக்கள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன.

அதே­போன்று இதற்கு ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழுவும் இறங்­கி­யுள்­ளது. இக்­கு­ழுக்கள் அரசின் ஸ்திரத்­தன்­மையை இல்­லாமற் செய்யும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன.

ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது. அர­சுக்கு விரோத அறிக்­கை­களை வெளி­யிட்­டு­வ­ரு­கி­றது. இக்­கு­ழுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றார்.


இதே­வேளை இதற்குப் பதி­ல­ளித்து அமைச்சர் ஹக்கீம் உரை­யாற்­று­கையில்,

வெளி­நாட்­ட­மைச்சர் குறிப்­பிட்ட முஸ்லிம் அமைப்பில் எமக்கும் உடன்­பா­டில்லை, ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அறிக்­கை­க­ளையும் இந்தச் சூழ்­நி­லையில் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. குறித்த முஸ்லிம் அமைப்பின் செயற்­பா­டு­களை நாம் கண்­டிக்­கிறோம். இன்று (நேற்று) அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பின் பிர­தி­நி­தி­களை அழைத்து முஸ்­லிம்­களின் சம­காலப் பிரச்­சி­னைகள் அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்றி ஆராய்ந்து வரு­கி­றார்கள் என்றார்.

 ARA.Fareel
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW