பட்ஜட்டில் மாற்றம்: மா.சபைகளுக்கு மீண்டும் நிதி ஒதுக்கீடு
2017ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டிருந்த மாகாண சபைகளுக்கான நிதியை மீண்டும் வழங்குவதற்கு இணங்கியுள்ளது நிதியமைச்சு.
நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரை சந்தித்த மாகாண முதல்வர்கள் முன் வைத்த கோரிக்கைகளை செவிமடுத்த ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் இதற்கான இணக்கத்தைக் கண்டுள்ள அதேவேளை குறித்த சந்திப்பில் ஒன்பது மாகாண முதவ்வர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.