பணத்தை பறிக்க, அரசாங்கம் முயற்சி - மஹிந்த குற்றச்சாட்டு

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டதாகவும் இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களிடமிருந்தும் பணம் பறிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றில் சேவை பெற்றுக்கொள்ள செல்லும் மக்களிடம் வரி அறவீடு செய்யப்பட உள்ளதாகவும் கடன் பெற்றுக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டு எதனை சாதித்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தர்கள் என குறிப்பிட்டுள்ளார்.