COPE அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு: கபீர் ஹாஷிம்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனைக் குற்றவாளியாகக் கண்டிருக்கும் கோப் குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஐ.தே.க செயலாளர் கபீர் ஹாஷிம்.
அறிக்கையின் பரிந்துரைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக கபீர் ஹாஷிம் தெரிவித்திருந்தமையும் அறிக்கை வெளியாவதற்கு முன் மகேந்திரன் சிங்கப்பூர் கிளம்பிச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.