நாளை பெருமுழுநிலவு (Supermoon)!
1948ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக பூமிக்கு 356,509 கி.மீ தொலைவை அண்மிக்கும் பெருமுழுநிலவு நாளை 14ம் திகதி காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நேரப்படி இரவு 7.30 அளவில் இக்காட்சி எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இதற்கடுத்ததாக 2034ம் ஆண்டு நவம்பர் மாதமே இவ்வாறான நிகழ்வு இடம்பெறும் என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இறுதியாக 1948, ஜனவரி 26ம் திகதி இவ்வாறு பெருநிலவு காட்சியளித்திருந்தமையும் குறித்த தொலைவில் வழமையை விட 14 வீதம் அளவில் பெரியதாகவும் 30 வீத அதிக வெளிச்சத்துடனும் நிலவு காட்சியளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.