இன்று கிழக்கில் 299பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனக்கடிதங்கள் -அவசர தொலைபேசி அழைப்பில் வழங்கப்படுகிறது. முள்ளிநியூஸ்

இன்று கிழக்கில் 299பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனக்கடிதங்கள் -அவசர தொலைபேசி அழைப்பில் வழங்கப்படுகிறது.


கிழக்கு மாகாணத்தில் இன்று 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை 299 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவிருக்கின்றது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இந்நிகழ்வு திருகோணமலை இந்துக்கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

இவர்கள் கணித விஞ்ஞான ஆங்கில பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறுகையில்

போட்டிப்பரீட்சையில் தெரிவான 345 பட்டதாரிகளுள் நேர்முகப்பரீட்சை மூலம் 299பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நேற்று கல்வியமைச்சிடம் கையளித்துள்ளது.

இவ்வாண்டுக்குள் அதனை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக அறிவித்து வழங்கவுள்ளோம்.

எனவே அவசர அவசரமாக அத்தனை பட்டதாரிகளுக்கும் தொலைபேசசி வாயிலாக அறிவித்துள்ளோம்.

இவர்கள் ஜனவரி 2ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகியதும் பாடசாலை சென்று கடமையை பொறுபேற்கவேண்டும்..
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW