தம்பலகாமம் 99 ஆம் கட்டை மீரா நகர் ஜூ ஆப் பள்ளி வாயல் கல்லெறிந்து தாக்குதல்

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் 99 ஆம் கட்டை மீரா நகர் பகுதியில் ஜூ ஆப் பள்ளி வாயல் மற்றும் அப் பகுடியில் உள்ள சில கடைகளும் இனம் தெரியாதோர் வெறியர்களால் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இச் சம்பம் இன்று 15 வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதன் விளைவாக இப் பள்ளி வாயிலின் கண்ணாடிகளும், கடைகளும் உடைக்கப்பட்டு பலத்த சேதங்களுக்குள்ளாக்கப் பட்டுள்ளது
இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளி நியுஸ் குழு
(இஹ்ஸானா- பரீத்)